Wednesday, September 25, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(22-09-13 முதல் 28-09-13வரை)

தென்கொரிய அலைபேசி தயாரிப்பு நிறுவனமான எல்ஜி இந்தியச் சந்தையில் அதன் ஜி2 வகை நுண்ணறிபேசியை வரும் செப்டம்பர் 30-ம் தேதி வெளியிடவுள்ளது.

சீன தொலைதொடர்பு மற்றும் அலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய் புதியதாக 5,500 வேலைகளை ஐரோப்பாவில் உருவாக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத்தைச் சேர்ந்த முதுகலை பொறியல் பட்டதாரி மாணவர் அமெரிக்க டாலர் $1,80,000 (இந்திய ரூபாயில் தோராயமாக 1கோடியே 10 லட்சம்) சம்பளத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திடமிருந்து பணியாணை பெற்றுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது (கிட்டத்தட்ட) தோல்வி தயாரிப்பான சர்ஃபேஸ்(Surface) குளிகைக்கணினியை மேம்பாடுகளுடன் சர்ஃபேஸ் 2, சர்ஃபேஸ் புரோ 2 என்ற பெயரில் மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த ஒரு நுண்ணறிபேசி நிறுவனம் நரேந்திரமோடியை கருப்பொருளாகக்(Theme) கொண்டு இரண்டு நுண்ணறிபேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.  ஸ்மார்ட்நமோ சஃபரான் ஒன்(Smar NaMo Saffaron One), ஸ்மார்நமோ சஃபரான் டூ(Smart NaMo Saffron two) என்று பெயரிடப்பட்டுள்ள இவ்விரு அலைபேசிகளும், மின்-வணிக(சந்தை) இணையதளமான ஸ்னாப்டீல்(SnapDeal)-ல் கிடைக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக்-ஐ இன்டெலின் இயக்கிகளைக்(Processors) கொண்டு மேம்படுத்தியுள்ளது.

ஆரக்கிள் நிறுவனம் 10 புதிய மேகக்கணிமை சார்ந்த சேவைகளைப் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

காணொளி விளையாட்டு உருவாக்க நிறுவனமான வால்வ், ஸ்டீம்ஓஎஸ்(SteamOS) என்கிற பெயரில் பிளே ஸ்டேஷன்(Play Station), எக்ஸ்பாக்ஸ்(Xbox) போன்று ஒரு விளையாட்டு மென்பொருளை உருவாக்கியுள்ளது.  முக்கியமான விஷயம் இதன் மூலநிரலை கட்டற்ற/திறந்த உரிமத்தில் வெளியிடவுள்ளதாக கூறியுள்ளது.

சாம்சங், மைக்ரோமேக்ஸ் நிறுவனங்களைப் போல எச்டிசி நிறுவனமும் குறைந்த விலை நுண்ணறிபேசிகளை (இந்திய ரூபாய் 10,000 அல்லது அதை விடக் குறைவாக) உருவாக்க திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து 5ஜி(5G) தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஆராய்சிகளை மேற்கொண்டுவரும் சீனா, 2020 வாக்கில் தன்னுடைய 5ஜி தொழில்நுட்பத்தை சோதனை செய்துபார்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போர்டு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி(CEO) ஆலன் முல்லே மென்பொருள் பெருநிறுவனமான மைக்ரோசாஃப்டின் அடுத்த தலைமைச் செயலதிகாரிப் பதவிக்கான போட்டியில் முன்னணியில் உள்ளார்.

நுண்ணறி அலைபேசி நிறுவனமான பிளாக்பெரி தனது இரண்டாவது காலாண்டில் சுமார் $965 மில்லியன் இழப்பைச் சந்தித்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(15-09-13 முதல் 21-09-13வரை)

ஆன்ட்ராய்டு நுண்ணறிபேசிகளில் பிளாக்பெரி மெசஞ்சர் (BlackBerry Messenger) செயலி(App)-ஐ செப்டம்பர் 20 தரவுள்ளதாக சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னணி மின்வெளி பாதுகாப்பியல் நிபுணர்(Cyber security expert) ஒருவர், முன்னணி பங்குச்சந்தையான நாஸ்டாகின்(Nasdaq) இணையதளத்தை hack செய்ய தனக்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆனதாக தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனம் நுண்ணறிபேசிகளுக்கான செயலிகளை உருவாக்கும் நிறுவனமான Bump -ஐ கையகப்படுத்தியுள்ளது.  இந்நிறுவனம் நுண்ணறிபேசிகளை ஒன்றோடொன்று அசைப்பதன்மூலம் தொடர்பிற்கு கொண்டுவந்து தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உதவும் ஒரு செயலியை Bump(ப(அ)ம்ப்) என்கிற பெயரில் வெளியிட்டுள்ளது.  Bump செயலியை கூகுளின் பிளே ஸ்டோரிலிருந்து பெற இங்கே சொடுக்கவும்.  Bump பயன்பாடு குறித்தான யூடியூப் காணொளி காட்சி



மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது கேன்வாஸ் வரிசை குளிகைக்கணினியின் முதலாவதான கேன்வாஸ் குளிகைக் கணினியை(Canvas Tab P650) இந்திய ரூபாய் சுமார் 16,500 விலையில் வெளியிட்டுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது இணைய உலாவியான இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் இருந்த பாதுகாப்பு ஓட்டைக்கான(இது கொந்தர்களால்(hacker) கண்டறியப்பட்டு தவறான வழிகளில் பயன்படுத்தப்பட்டது) ஒரு புதிய சரிசெய்யும் நிரல் துண்டை(patch) வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் தனது வங்கிச்சேவை தீர்வு மென்பொருளான ஃபின்னாக்கிளின் புதிய பதிப்பை (Finacle 11E) வெளியிட்டுள்ளது.  இதன்மூலம் பன்னாட்டு வங்கிச்சேவை மென்பொருள் வணிகத்தில் முக்கிய இடத்தை பிடிக்குவுள்ளதாக தெரிவித்துள்ளது.

முன்னணி கேமரா தயாரிப்பு நிறுவனமான நிகான் நீர் புகாத ஒரு புதிய AW1 கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது நீருக்குள் 15 மீட்டர் ஆழம் வரையான அழுத்தத்தை தாங்கி நீர் புகாவண்ணம் தயாரிக்கப்பட்டுள்ளது.  மேலும் 2 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தாலும் அதிர்வை தாங்கிக்கொள்ளும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கூகுளின் யூடியுப் இணைய இணைப்பின்றி காணொளிக்காட்சிகளை காணும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.  மேலும், இந்த வசதி 48 மணிநேரம் பார்க்கக்கூடிய அளவிற்கு(இணைய இணைப்பின்றி) இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மைன்ட்ரீ நிறுவனம் காணொளி கடுங்கண்காணிப்பு(Video Surveillance) மென்பொருள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு நுண்ணறிபேசிகளுக்கென்று பிரத்தியேகமாக ஒரு தேடல் இடைமுகப்பை(Interface) உருவாக்க திட்டமிட்டுள்ளது.

சிக்ஸ்த்சென்ஸ் என்கிற மென்பொருள் உருவாக்கத்தினால் உலகளவில் மிகப்பரவலாக அறியப்பட்ட பிரணவ் மிஸ்ட்ரி தற்போது சாம்சங் அமெரிக்கா நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவில் பணியாற்றிவருகிறார்.  மேலும், சாம்சங் நிறுவனத்தின் நுண்ணறி கைக்கடிகாரமான சாம்சங் கியர்(Samsung Gear) தயாரிப்பிலும் தற்போது பங்களித்து வருகிறார்.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

Tuesday, September 17, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(08-09-13 முதல் 14-09-13வரை)


சாம்சங் தனது கேலக்சி நோட் 3-ஐ இம்மாத இறுதில் இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது.



இணைய உலகில் கட்டுரைகள், செய்திகள் போன்ற பலவற்றிலும் கமெண்ட்(comment) எழுதும் இணைய பயனர்கள்(இளைஞர்கள்) 40% சதவீதம் பேர் தங்கள் அடையாளங்களை
மறைத்து அனானியாக(Anonymous) தான் எழுதிகிறார்கள் என Pew Research Centre study கூறியுள்ளது.

மத்திய அரசு இந்திய ரூபாய் 9,822 கோடி செலவில், ஏழை எளிய மக்களுக்கு 2.5 கோடி அலைபேசி மற்றும் 90 லட்சம் குளிகைக் கணினிகளை இலவசமாக தரவுள்ளதாக கூறியுள்ளதாக தெரிகிறது. (டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியில் இருந்து)

சோனி நிறுவனம் வளைவான திரையுடன் கூடிய எல்ஈடி டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நாசா(NASA) நிறுவனம் இன்ஸ்டாகிராமில்(Instagram) ஒரு பயனர் கணக்கைத் தொடங்கி இணைந்துள்ளது.  தனது புகைப்படங்களைப் பதிவேற்றி சில லட்சம் பயனர்கள் பின்தொடர்பவர்களாப் பெற்றுவிட்டது.

பேஸ்புக் நிறுவனம், டிவிட்டர் போல நிஜ நேர(Real Time) தகவல்களைத் தரும்வகையில் தனது வடிவமைப்பை மாற்றி வெற்றி பெற்ற பிறகு, தற்போது லின்க்டுஇன் போன்று தொழில்முறை சார்ந்த(Professional) தகவல்களைக் கொண்டதாக தனது வடிவமைப்பை மேலும் மெருகேற்ற உள்ளதாக தெரிகிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மிக முக்கிய, நீண்ட நாட்களாக புழக்கத்தில் இருந்து வருகிற மற்றும் அதிகம் பயன்படுத்தப்படுகிற தனது விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்திற்கான support(மற்றும் update)-ஐ அடுத்த ஆண்டிலிருந்து(2014) நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.  இதற்கு முன்னரே மத்திய அரசு நிறுவனமான சிடாக் தனது பாஸ் குனூ/லினக்சு இயங்குதளத்தை தமிழ்நாட்டின் பல அரசு அலுவலகங்களில் விண்டோசுக்கு மாற்றாக நிறுவிய நிலையில், மைக்ரோசாப்டின் இம்முடிவு பாஸ் லினக்ஸை மேலும் பரவலாக(இந்தியா முழுவதும் கூட) நிறுவ வழிவகுக்கும் எனலாம்.

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐ-போன்கள் 5s மற்றும் 5c ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்தியாவும் சீனாவும் இதன் முக்கிய விற்பனை சந்தைகளாக/மையங்களாக இருக்கும் எனக் கூறியுள்ளது.

எச்பி நிறுவனம் HAVEn என்ற பெயரில் பெருந்தகவல்(BigData) பகுப்பாய்வியல் களம்/தளம்/மேடையை(Platform) அறிமுகப்படுத்தியுள்ளது.

நிசான் நிறுவனம் நிசான் நிஸ்மோ(Nissan Nismo) என்ற பெயரில் நுண்ணறி கைக் கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.


ஒலிம்பஸ் நிறுவனம் முதன்முறையாக ஆடிகள்(லென்சுகள்) இல்லாத "OM-D E-M1" என்கிற கேமராவை அறிமுகப்படுத்தியுள்ளது, அத்தோடு இது DSLR கேமராவுக்கு இணையான தரத்துடன் புகைப்படத்தை எடுக்க முடியும் என்றும் கூறியுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐ-போனில் பயோமெட்ரிக்(Biometric) முறையில் கைரேகையை வைத்து பூட்டவும்(lock) திறக்கவும்(unlock) கூடிய வகையில் வடிவமைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.


சாம்சங் நிறுவனம் தனது நுண்ணறிபேசிகளில் 64-பிட்டு (64-bit) நுண்செயலிகளை(microprocessor) பயன்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக், குரூப்ஆன் போன்று தற்போது டிவிட்டர் நிறுவனமும் தனது பங்குகளை வெளியிட்டு பங்குச்சந்தைக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

வல்லிக்கேணி பார்த்தனும், வழியோரப் புத்தகங்களும்... :)

திருவல்லிக்கேணியில் சில மாதங்கள் தங்கியிருந்த மேன்ஷனைவிட்டு வந்த பிறகு கிட்டத்தட்ட சில வருடங்கள் உருண்டோடிவிட்டன நான் திருவல்லிக்கேணிக்கும், பார்த்தசாரதி கோயிலுக்கும் சென்று.  நேற்று, என் பால்யத்திலிருந்து இன்றுவரை மாறாத அன்புடன் இருக்கும் (என் ரசனையோடும், எண்ணங்களோடும் பெருமளவில் ஒத்துப்போகும்) நண்பன் ஒருவன் தன் சொந்த வேலைக்காக சென்னை வந்திருந்தான்.  அவனுக்கு சில புத்தகம் வாங்க வேண்டி இருந்ததால்(சுஜாதாவின் கடவுளின் பள்ளத்தாக்கு மற்றும் சில போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள்) திருவல்லிக்கேணிக்குப் போகவேண்டும் என்று அழைத்தான்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு திருவல்லிக்கேணிக்கு நேற்று பயணப்பட்டேன். 

திருவல்லிக்கேணி என்றதுமே எனக்கு (பலருக்கும் கூட) நினைவுக்கு வருவது வழியோரப் புத்தக(ங்களும்) கடைகளும், வல்லிக்கேணிப் பார்த்தனும்தான்.  இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கண்ணில் தெரிந்த முதல் கடையில் ஆரம்பித்து எல்லா கடைகளிலும் ஏறி இறங்கி விசாரித்துவிட்டோம் போட்டித்தேர்வுக்கான புத்தங்கள் கிடைத்துவிட்டன(ஆம் வழக்கமான 10% கழிவுடன்(discount), நீங்கள் வாங்கினாலும் மறக்காமல் கேளுங்கள்), ஆனால் கடைசிவரை சுஜாதா மட்டும் கிடைக்கவில்லை :(.  அடுத்த கட்ட நடவடிக்கையாக சாலையோர பழைய(சில சமயம் புதிய புத்தகங்களும் கூட கிடைக்கும்) புத்தகக் கடைகளை ஆராய ஆரம்பித்தோம்.  எங்கள் துரதிஷ்டம் படித்து முடித்த பல சுஜாதா புத்தங்கள் கிடைத்தன ஆனால் "கடவுளின் பள்ளத்தாக்கு" மட்டும் கிடைக்கவில்லை. 

நண்பனுக்கும் எனக்கும் ரசனை ஒற்றுமை உண்டென்று சொன்னேனில்லையா.. இருவருமே பார்த்தசாரதி கோயில் செல்லலாமென்று புறப்பட்டோம்.  நாங்கள் இருவரும் சேர்ந்தோ/தனித்தனியாகவோ கோயிலுக்கு செல்வதற்கு நிறைய காரணங்கள் உண்டென்றாலும் மிக முக்கியமாக மூன்று காரணங்கள்
1. சிற்ப(ங்கள்)க்கலை
2. சராசரியான இறைபக்தி (மூட நம்பிக்கைகள் எல்லாம் கிடையாது)
3. கலாச்சாரத்தின் மேலிருக்கும் விருப்பம்/நம்பிக்கை so & so (இன்ன பிற முக்கிய காரணங்களும் உண்டு ;-))

திவ்ய தரிசனம் என்பார்களே அது கிடைத்தது.  ஆம், நாங்கள் எந்த வித திட்டமும் இல்லாமல் தான் போனோம், நேற்று திருவோணம் என்பதாலும் பெருமாளுக்கு திருவோண நட்சத்திரம் விசேஷம்  (சிவனுக்கு திருவாதிரை நட்சத்திரம் போல) என்பதாலும் ஹோமங்களும், பிரபந்த படித்தலும் நடந்தன.  அலங்காரப் பிரியரான திருமாலை அதுவும் பார்த்தசாரதிப்பெருமாளை அருகில் நின்று பார்க்கும்போது அவ்வளவு அற்புதமான ஒரு தேஜசுடன் பிரும்மாண்டமாக இருக்கிறார்.   எவ்வித தள்ளு முள்ளுகள் இல்லாமலும் பொறுமையாக பெருமாளை தரிசிப்பது என்பதென்பதே மிக அழகானதொரு அனுபவம். 

பெரும்பாலும் கோயிலுக்கு நண்பர்களோடு போனால் கோயில் பிரசாதக் கடையை ஒரு ரவுண்டு வருவோமில்லையா, அதனால் வழக்கம்போல காரதட்டை மற்றும் புளியோதரை வாங்கி சாப்பிட்டுவிட்டு இரயிலேறி கிளம்பினோம். 


குறிப்பு: திருமாலின் 108 திவ்ய தேசக்கோயில்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலும் ஒன்று.   சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறத்திலிருக்கும் மற்ற திவ்யதேச பெருமாள் கோயில்களாவன பல்லாவரத்திற்கு அருகில் திருநீர்மலையிலுள்ள நீர்வண்ணப்பெருமாள் கோயில், கிழக்குக் கடற்கரை சாலையில் திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாணப் பெருமாள் கோயில், மாமல்லபுரத்திலுள்ள தரை கிடந்த பெருமாள்(ஸ்தல சயனப் பெருமாள் கோயில்) ஆகியனவாகும்.

Thursday, September 12, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(01-09-13 முதல் 07-09-13வரை)


இந்திய தகவல் தொழில்நுட்பத்துறையின் முக்கியப் பெரு நிறுவனமான விப்ரோ, இளங்கலை மாணவர்கள் தங்கள் தொடர்பு மற்றும் மென் திறமைகளை(Communications & Soft skills) வளர்த்துக்கொள்ள ஒரு திட்டத்தினை உருவாக்கியுள்ளது.  விப்ரோ ஒருங்கிணைந்த திறமை வளர்ப்பு திட்டம்(WISEPro - Wipro Integrated Skill Enhancement Programme) எனப்பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம் ஒரு நாடு தழுவிய திட்டம் ஆகும்.

வங்கியிடம் இருந்து வந்த ஈ-மெயில் போன்ற பொய்யான/போலி மெயில்களுக்கு 30% பேர் பலியாவதாக எதிர்-நச்சுநிரல் தயாரிப்பு நிறுவனமான காஸ்பர்ஸ்கை(Kaspersky) கருத்துக்கணிப்பு தெரிவிட்டுதுள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் முன்னணி(ஓரு காலத்தில் என்று கூட சொல்லலாம் :P )கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான நோக்கியாவை கையகப்படுத்தியுள்ளது.

99.9% சதவீத மால்வேர்(malware)கள் கூகுளின் ஆண்ட்ராய்டு நுண்ணறிபேசி இயங்குதளத்தை குறிவைத்து தயாரிக்கப்படுவதாக காஸ்பர்ஸ்கை தெரிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் அதன் நுண்ணறி கடிகாரமான கேலக்ஸி கியரில் (Galaxy Gear) அனைத்து முக்கிய இந்திய மொழிகளையும் சேர்க்க இருப்பதாக அறிவித்துள்ளது.

நுண்ணறி அலைபேசிச் சந்தையை அடுத்து அனைத்து முன்னணி நிறுவனங்களும் தற்போது நுண்ணறி கைக்கடிகாரம் தயாரிப்பில் முழுமூச்சாக இறங்கியுள்ளன.  அந்த வரிசையில் குவால்காம்(Qualcomm) நிறுவனம்  டாகு(Toq) என்ற பெயரில் ஒரு கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சோனி இந்தியா நிறுவனம் அதன் அலைபேசி மற்றும் புகைப்படக் கருவிகளின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்திய உருவாக்குனர்களுக்காக(developers) ஒரு தனிப்பட்ட இணைய வலைவாசலை(web portal) உருவாக்கியுள்ளது.

சாம்சங் நிறுவனம் 3.25 லட்சம் விலையில் அல்ட்ரா-எச்டி(Ultra-HD) தொலைக்காட்சிப் பெட்டிகளை வெளியிட்டுள்ளது.

கூகுள் குரோம் உலாவியில் செயல்படும் செயலிகள் [ஆப்கள்(Apps)] இனி மேசைக்கணினியின் பணிமேடையிலும் செயல்படும் வகையில் எழுதப்படவுள்ளது. லைப்ஹேக்கர் இணையதளததில் இது குறித்தப் பதிவு

ஆன்ட்ராய்டு இயங்குதளத்தின் புதிய பதிப்பு 4.4 கிட்கேட் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

எச்டிசி நிறுவனம் இந்திய ரூபாய் 52,428 விலையில் பட்டர்பிளை S நுண்ணறி அலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் சமூக வலைதளங்களில் நுண்ணறிபேசி மூலம் பங்கெடுக்கும் பயனர்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளதாக சமூக வலைதள கணக்கெடுப்பு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

பிளாக்பெரி இந்தியாவின் புதிய தலைவராக சுனில் லால்வனி பொறுப்பேற்கிறார்.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு 

Wednesday, September 4, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(25-08-13 முதல் 31-08-13வரை)


மனித கண்ணின் ரெட்டினாவைப்போல் அதிவேகமாக செயல்படும் ஒரு கேமராவினை சுவிஸ் நாட்டைச்சேர்ந்த இனிலேப்ஸ்(iniLabs) எனும் நிறுவனம் தயாரித்துள்ளது.  இது டைனமிக் விஷன் சென்சார்(Dynamic Vision Sensor- DVS) எனும் தொழில்நுட்பத்தால் இயங்குகிறது.

இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இதுவரை வெளியிட்ட நுண்ணறிபேசிகளைவிட மிகப்பெரியதும், விலை அதிகமானதுமான ஒரு புதிய நுண்ணிறிபேசியை வெளியிட்டுள்ளது.  கேன்வாஸ் டூடுல் 2(Canvas Doodle 2) என்று பெயரிடப்பட்டுள்ள இது 5.7 இன்ச் திரையுடனும், 1.2 GHz குவாடு-கோர் புராசசருடனும், 1GB RAM நினைவகத்துடனும், 12 GB உள்ளார்ந்த நினைவகத்துடனும் வருகிறது.  விலை சுமாராக 20,000.

இந்தியாவின் ஸ்பைஸ் நிறுவனம்  பின்னாக்கிள் எஃப்எஃச்டி(Pinnacle FHD) என்ற பெயரில் மலிவுவிலை முழு எஃச்டி(HD) நுண்ணிறிபேசி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.  விலை சுமாராக 16,500.

இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய துணைத்தலைவராக திரு என். ஆர். நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

தன்னுடைய நிதி மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக இன்போசிஸ் நிறுவனம் அயல்நாட்டில் பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

கூகுள் நிறுவனம் ஓட்டுனர் இல்லாமல் ரோபோக்களின் உதவியுடன் இயங்கும் வாகனங்களை பரிசோதனை அளவில் தயாரித்து, சோதனை மற்றும் வெள்ளோட்டம் விட்டது நாமறிந்ததே.  இப்போது இத்தொழில்நுட்பத்துடன் கூடிய பயணியர் டாக்சியை கூகுள் அறிமுகப்படுத்துவுள்ளதாகத் தெரிகிறது.

மலிவான ஆனால் தரமான நுண்ணிறபேசிகளின் தேவை அதிகரித்துள்ளதால் இந்தியாவின் மைக்ரோமேக்ஸ் மற்றும்  கார்பன் நிறுவனங்களின் அலைபேசிகள் இந்தத்துறையில் சக்கைப்போடு போடுகின்றன.  இப்பொழுது இவ்விரு நிறுவனங்களும் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி விற்பனையில் முன்னுக்கு வந்துள்ளன.


ஃபேஸ்புக் shared albums எனும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன்மூலம் நண்பர்கள் தங்கள் புகைப்படங்களைப் குழுவாக புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்ளளாம்.

ஆப்பிளின் ஐஃபோன் 5S(iPhone 5S) மிக அதிகமான செயலாக்குத்திறனுடன்(Processing power) கூடிய A7-சிப்புடன் வெளிவரக்கூடும் என நம்பப்படுகிறது.  இது இந்த நுண்ணிறிபேசியின் செயல்திறனை 31% வரை அதிகரிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

யாகூ தேடியந்திர நிறுவனம் புகைப்படங்களை தேடித்தரும் பணியினைச் செய்யும் சிறுநிறுவனமான IQ Engines எனும் நிறுவனத்தை கையப்படுத்தியுள்ளது.

சாம்சங் நிறுவனம் குழந்தைகளுக்காக கேலக்ஸ் டேப் 3 (Galaxy Tab 3) என்கிற டேபை அறிமுகப்படுத்தவுள்ளது.

சிரிய(Syria) நாட்டைச் சேர்ந்த கொந்தர்களால்(hacker) நியுயார்க் டைம்ஸ் மற்றும் டிவிட்டர் தளங்கள் முடக்கப்பட்டன.






மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை கையகப்படுத்தியது

மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை கையகப்படுத்தியது
மைக்ரோசாப்ட் நிறுவனம் நோக்கியாவை கையகப்படுத்தியது